News February 13, 2025

திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளராக செஞ்சி மஸ்தான் நியமனம்

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகச் செயலாளராகவும் அமைச்சராகவும் பதவி வகித்து வந்த செஞ்சி மஸ்தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Similar News

News September 24, 2025

லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் தென்பசியார் கிராம நிர்வாக அலுவலர் பொன்னைவனம் என்பவர் பட்டா மாற்றம் செய்ய ரூ.2500 லஞ்சம் வாங்கியதால் அவரை லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து திண்டிவனம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

News September 24, 2025

விழுப்புரத்தில் சொத்து தகராறில் சித்தி கொலை

image

விழுப்புரம் மாவட்டம், துறிஞ்சிப்பூண்டியில் கிணற்றில், முகம் சிதைந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது. போலீசார் விசாரணையில், இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பது தெரியவந்தது. அவரைக் கொலை செய்தது, ஜெயக்கொடியின் கணவரான பழனிவேலுவின் முதல் மனைவியின் 2வது மகனான பிரகாஷ்ராஜ் என்பதும் தெரியவந்துள்ளது. சொத்துத் தகராறில் தனது சித்தியை அடித்துக் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 24, 2025

10.5% இட ஒதுக்கீடு: டிசம்பரில் மாநில தழுவிய ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி டிசம்பர் முதல் வாரத்தில் தமிழக முழுவதும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் போராட்டம் நடைபெறும் என விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று நடைபெற்ற வன்னியர் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!