News February 25, 2025
திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை நகரத்தில் மாவட்ட திமுக மாணவரணி சார்பில் தலைமை அஞ்சல் நிலையம் எதிரில் மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி மொழியை திணிப்பதை எதிர்த்து மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணை செயலாளர் வினோத் காந்தி, ஆற்காடு MLA ஈஸ்வரப்பன் கலந்து கொண்டனர்.
Similar News
News March 3, 2026
ராணிப்பேட்டையில் சர்க்கரை நோயா..? இலவச சிகிச்சை!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்களுக்கோ, உங்களது உறவினர்கள், நண்பர்களுக்கோ சர்க்கரை நோய் பாதிப்புள்ளதா..? அந்த பாதிப்பால் பாதங்களில் புண்கள் ஏற்பட்டுள்ளதா..? இனி கவலை வேண்டாம். தமிழக அரசின் ‘பாதம் பாதுகாக்கும் திட்டம்’ மூலமாக இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும். உடனே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகலாம். இந்த பயனுள்ள தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் ஆபீஸில் குவிந்த மனுக்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று (மார்ச் 2) நடைபெற்றது இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு குறைகளைக் கேட்டறிந்தார். இதில், 590 மனுக்கள் பெறப்பட்டன. 8 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ. 5.58 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
News March 3, 2026
ஆற்காடு எம்.எல்.ஏ மீண்டும் விருப்ப மனு

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், ஆற்காடு தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஜே.எல். ஈஸ்வரப்பன், 2026 தேர்தலில் மீண்டும் ஆற்காடு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார். இவர் 2021 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


