News June 9, 2024
திமுக பிரமுகர்கள் வெட்டி கொலை

திருவாரூரை சேர்ந்தவர் பாபு(திமுக பிரமுகர்). இவர் தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று தனது மகனுடன் காரில் வந்துள்ளார். தஞ்சாவூர் – நாகை தேசிய நெடுஞ்சாலையில் காரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக மகன் கண்முன்னே வெட்டி கொலை செய்தனர். உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News September 9, 2025
திருவாரூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்களின் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.,9) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
News September 9, 2025
திருவாரூர்: ஆசிரியர் வேலை – நாளையே கடைசி நாள்

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (TET) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க நேற்று (செப்.8) இறுதி நாளாக இருந்த நிலையில், நாளை (செப்.10) வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பிக்கத் தவறியவர்கள், உடனே https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க..
News September 9, 2025
உழவர் நலத்துறையின் சார்பில் சுற்றுலா

திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில், வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் அங்கக வேளாண்மை குறித்து அறியும் வகையில் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவினை இன்று (செப்.09) மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.