News September 16, 2024
திமுக பந்த் போராட்டம் போலி நாடகம்

புதுவையில் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை திரும்ப பெற அதிமுக சார்பில் இன்று நடைப்பெற்ற உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டு பேசிய எம்எல்ஏ நேரு ஆட்சியாளர்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை மின் துறையை தனியார் மயமாக்க வேண்டிய அவசியம் என்ன சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக செயல்படாத திமுக பந்த் போராட்டம் அறிவித்திருப்பது மக்களை ஏமாற்றும் செயல் என பேசினார்.
Similar News
News September 15, 2025
புதுவை பாண்லே ஊழியரிடம் 6 சவரன் நகை பறிப்பு

புதுவை சண்முகாபுரத்தைச் சேர்ந்த பாண்லே அலுவலகத்தின் சீனியர் அசிஸ்டென்ட் விஜயலட்சுமி என்பவர் நேற்று முன்தினம் இரவு கதிர்காமத்தில் உறவினர் வீட்டில் இருந்த தனது மகள்களை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் வீட்டிற்கு செல்லும்போது, பின்னால் பைக்கில் வந்த நபர், விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 6 சவரன் தாலி செயினை பறித்து தப்பி சென்றதாக கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News September 15, 2025
புதுவை: மத்திய அரசில் இன்ஜினியர் பணி அறிவிப்பு

மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc., B.E., B.Tech., M.Tech., M.E., படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <
News September 15, 2025
புதுவை: ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் ஒப்புதல்

புதுச்சேரியில் அரசு உதவி பெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு கடந்த 7 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனைக் கண்டித்து அரசு நிதி உதவிபெறும் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். ஆசிரியர்களின் 5 மாத சம்பளம் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிலுவைத் தொகை என மொத்தம் ரூ.23.77 கோடி மானியம் வழங்க கவர்னர் கைலாஷ்நாதன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.