News April 26, 2024
திமுக சார்பில் நீர் மோர் பந்தல்

கோடை காலத்தை முன்னிட்டு பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறக்கும்படி திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அந்த வகையில் இன்று தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழச்சாறுகளை வழங்கினார்.
Similar News
News March 6, 2026
தூத்துக்குடி: 30 பேர் படுகொலை – பகீர் தகவல்!

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 30 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த பகுதியில் குறிப்பாக கொலை சம்பவங்கள் பரும அளவுக்கு அதிகரித்து வருகிறதாகவும், இவற்றில் பெரும்பாலானவை போதையில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, தூத்துக்குடியில் ஜன.மாதம் 13 கொலையும், பிப்.மாதம் 12 கொலையும் நடந்துள்ளது.
News March 6, 2026
தூத்துக்குடி: சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அரசு அலுவலக உலகத்திலுள்ள கிளை சிறையில் நேற்று (மார்ச்.05) பெண்ணை தாக்கிய வழக்கில் கைதான நிரஞ்சன் என்ற கைதி தப்பி ஓடி உள்ளார். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் கிழக்கு காவல் நிலைய போலீசார் தப்பி ஓடிய கைதியை தேடி வருகின்றனர். மேலும் சிறைத் துறை அதிகாரிகள் கிளை சிறையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
News March 6, 2026
தூத்துக்குடி இன்று இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


