News March 4, 2026
திமுக காங்கிரஸ் இழுபறி இன்று முடிவுக்கு வருமா?

திமுக காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பெரும் இழுபறியில் உள்ளது. மற்றொரு பக்கம் தவெக தரப்பிலும் காங்கிரஸ் பேசி வருவதாக செய்தி வெளியானதால் அக்கட்சி நிர்வாகிகளே குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் திமுக – காங்., பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. திமுக தரப்பில் அதிகபட்சமாக 29 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News March 27, 2026
தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியானது

NDA கூட்டணியில் தமாகாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்கள் பட்டியலை ஜி.கே.வாசன் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி, ராணிப்பேட்டை – கார்த்திகேயன், ஈரோடு மேற்கு – யுவராஜா, ஒட்டன்சத்திரம் – விடியல் சேகர், கும்பகோணம் – அசோக்குமார், கிள்ளியூர் – நிவின் சைமன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த 5 தொகுதிகளில் தமாகா தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>
News March 27, 2026
மோடி அழைத்தார்.. நாட்டு மக்கள் அதிர்ச்சி CLARITY

மேற்காசிய போர்ச்சூழல் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து மாநில CM-களுக்கு PM மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதில் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. ஏற்கெனவே, கொரோனா போன்ற சூழல் என மோடி குறிப்பிட்டதால் மக்களிடையே அச்சம் நிலவியது. ஆனால், லாக் டவுன் என்பது வதந்தியே என இன்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 27, 2026
அண்ணாமலை விலகியதற்கு அதிமுகதான் காரணமா?

அண்ணாமலை தேர்தலில் இருந்து விலகியதற்கு அதிமுக மீதான அதிருப்தியே காரணம் என புதிய தகவல் ஒன்று அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பிவருகிறது. பாஜக வளர்ந்து வரும் தொகுதிகளை ஒதுக்காமல் வேறு தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளதாக தலைமைக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார் என்கின்றனர். இதனாலேயே தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


