News November 4, 2025
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News November 4, 2025
தனித்தொகுதியில் தனி கவனம் செலுத்தும் திமுக!

தனித் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு இதர சாதியினர் ஓட்டுப்போடுவதில்லை என்ற பேச்சு உள்ளது. அதனால்தான், கடந்த தேர்தல்களில் கூட்டணி வலுவாக இருந்தும், தனித் தொகுதிகளில் திமுகவை விட அதிமுக அதிக எண்ணிக்கையில் வெற்றிபெற்றது. குறிப்பாக, பொன்னேரி, வாசுதேவநல்லூர், அவிநாசி உள்ளிட்ட பல தனித் தொகுதிகளில் நீண்டகாலமாக DMK போட்டியிடவில்லை. தற்போது தனித் தொகுதிகளில் கவனம் செலுத்த திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாம்.
News November 4, 2025
புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு!

கிருஷ்ணகிரி, அரசம்பட்டி அருகே 3-ம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரியிலிருந்து ஆந்திராவின் பூதலப்பட்டு வரை அதியமான் பெருவழியை ஒட்டிய பகுதிகளில் அண்மைக்காலமாக புதிய கல்வெட்டுகள் கிடைத்து வருகின்றன. இதில், தண்டம், குடை, சேவல், பன்றி, ஏர்கலப்பை, குத்துவிளக்கு போன்ற வணிக சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால் புதிய ஆய்வுகளுக்கு வழி வகுத்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
News November 4, 2025
எங்களிடம் மோதாதீர்கள் சீமான்: டி.ஜெயக்குமார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 5 அமாவாசை தான் இருக்கிறது; அதுவரை மட்டுமே திமுகவால் ஆட முடியும் என்று டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும், காலில் விழுந்து முதல்வர் பதவி பெற்றதுதான் சுயமரியாதையா என்று இபிஎஸ்ஸை சீண்டிய சீமானுக்கும் அவர் பதிலடி கொடுத்துள்ளார். சீமான் எங்ககிட்ட வந்து மோத வேண்டாம்; அதிமுக தொண்டர்களை வசைபாடினால் நிச்சயம் வாங்கி கட்டிக்கொள்வீர்கள் என எச்சரித்தார்.


