News December 21, 2025
திமுக ஆட்சியில் துயரத்தில் மக்கள்: OPS

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என OPS கண்டனம் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் அவர்களின் கூட்டமைப்பு நிர்வாகிகளிடம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
Similar News
News December 25, 2025
விஜய் + ஓபிஎஸ் + டிடிவி கூட்டணி.. முடிவு இறுதியானது

NDA-வில் இருந்து பிரிந்த TTV, OPS தரப்பு இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இதனிடையே நடைபெற்ற கூட்டத்தில், தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என OPS கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விரைவில் OPS நல்ல முடிவை எடுப்பார் என செங்கோட்டையன் கூறியுள்ளார். அத்துடன், அமமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் TVK + OPS + TTV கூட்டணி உறுதியாகும் என கூறுகின்றனர்.
News December 25, 2025
தமிழகத்திற்கு ஜனவரியில் புதிய டிஜிபியா?

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆக.31-ல் ஓய்வு பெற்றார். புதிய டிஜிபி நியமிக்கப்படாததால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வந்த நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜனவரியில் தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதில், மூத்த IPS அதிகாரி சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 25, 2025
தமிழர் என்றால் நாதகவுக்கு ஓட்டு போடுங்கள்: சீமான்

திராவிடம் என்பது தமிழன் அல்லாதவன் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஒன்று என சீமான் விமர்சித்துள்ளார். நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தங்களை திராவிடர்கள் என்று எண்ணுகிறவர்கள் தனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதேநேரம், தமிழர்கள் என்று எண்ணுகிற மக்கள் தனக்கு ஓட்டு போடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். திராவிட கட்சிகளால் மக்களுக்கு பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


