News December 25, 2025
திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்து: அண்ணாமலை

திட்டக்குடியில் <<18664505>>அரசு பஸ்<<>> மோதி 9 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளித்ததாக அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அரசு பஸ்கள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. பஸ்களின் பராமரிப்பு, டிரைவர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகளில் திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இத்தகைய தொடர் விபத்துக்கள். இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Similar News
News December 30, 2025
சூப்பரான மார்கழி புள்ளி கோலங்கள்!

நடக்கும் போது நம் காலடிபட்டு சிறு உயிரினங்கள் இறக்கின்றன. இதுவும் ஒருவகை பாவம் என்பதால் தோஷம் ஏற்பட்டு கன்னிப் பெண்களுக்கு திருமண தடை நீடிப்பதாக நம்பப்படுகிறது. இதை தவிர்க்கவே அரிசி மாவில் கோலமிடும் பழக்கம் தொடங்கப்பட்டது. அந்த அரிசி மாவினை சிறு உயிரினங்கள் உண்ணும் போது தோஷம் அகலும் என கூறப்படுகிறது. அந்தவகையில், சில மார்கழி கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை Swipe செய்து பார்க்கவும்.
News December 30, 2025
இன்று 5-வது டி20: இந்தியா Vs இலங்கை

இந்தியா, இலங்கை மகளிர் அணிகள் இடையிலான கடைசி டி20 இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. தொடரை 4-0 என்ற கணக்கில் வசப்படுத்தியுள்ள IND, இந்த போட்டியிலும் வென்று SL-ஐ ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் உள்ளது. முதல் 3 போட்டிகளில் படுதோல்வி கண்ட SL, 4-வது டி20-ல் 222 ரன்களை துரத்தும் முயற்சியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோற்றது. எனவே, 5-வது டி20-ல் ஆறுதல் வெற்றிபெற அந்த அணி போராடும்.
News December 30, 2025
புத்தாண்டில் கார்களின் விலை உயர்கிறது!

புத்தாண்டை முன்னிட்டு கார் வாங்க விரும்புபவர்களுக்கு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஷாக் கொடுத்துள்ளன. மூல பொருட்களின் விலையேற்றம், பராமரிப்பு செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால், ஜனவரி முதல் வாரத்தில் கார் நிறுவனங்கள் விலையை அதிகரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெர்சிடஸ் பென்ஸ், BMW, ஹுண்டாய், டாடா, மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள், மாடல்களை பொறுத்து ₹17,000 – ₹2.68 லட்சம் வரை விலையை உயர்த்த உள்ளதாம்.


