News December 4, 2025
திமுகவால் தான் பிரச்னை பெரிதானது: கிருஷ்ணசாமி

திருப்பரங்குன்றத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல், அரசியல் நோக்கத்தோடு 144 தடை உத்தரவை பிறப்பித்திருப்பதை ஏற்க முடியாது என கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். கோயிலுக்கு சாதகமான உத்தரவை ஏற்றுக்கொண்டு இருந்தால் பிரச்னை ஏற்பட்டிருக்காது என்ற அவர், அரசால்தான் பிரச்னை பெரிதாகியதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ் மக்களின் உணர்வுகளை அரசு கருத வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News December 4, 2025
சாலைகளை காணவில்லை: ஆர்.பி.உதயகுமார்

பருவமழையால் மதுரையில் ரோட்டையும் காணவில்லை, மேயரையும் காணவில்லை என ஆர்.பி.உதயகுமார் பதிவிட்டுள்ளார். வரும் 7-ம் தேதி CM ஸ்டாலின் மதுரைக்கு செல்வதை மேற்கோள்காட்டிய அவர், மண்டல தலைவர்களையும், மதுரையின் சாலைகளையும் CM கண்டுபிடித்து தருவாரா என கேட்டுள்ளார். மேலும், விளம்பர வெளிச்சம் தேடுவதற்கு பதிலாக, மதுரைக்கு பயனுள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்கு CM நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
News December 4, 2025
தூர்தர்ஷன் தலைவர் ராஜினாமா!

தூர்தர்ஷன், ஆல் இந்தியா ரேடியோ ஆகியவற்றை நிர்வகிக்கும், பிரசார் பாரதியின் தலைவராக இருந்த நவ்நீத் குமார் செகல், ராஜினாமா செய்துள்ளார். 4 ஆண்டுகளாக காலியாக இருந்த தலைவர் பதவியில், அவர் மார்ச், 2024-ல் பொறுப்பேற்றார். ஆனால், 2 ஆண்டுகள் கூட நிறைவடையாத நிலையில் பதவி விலகியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், அவரது ராஜினாமாவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ஏற்றுக்கொண்டுள்ளது.
News December 4, 2025
தமிழக தேர்தல்.. அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான ஆயுத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர், 2 முதல் 4 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உடனே தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்வார்கள்.


