News December 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 545 ▶குறள்: இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
Similar News
News April 8, 2026
தீயசக்தி ஆட்சி வேண்டுமா? சசிகலா

மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என திமுக நினைப்பதாக சசிகலா கூறியுள்ளார். திமுக ஆட்சியில் விலைவாசி, வீட்டு வரி, சொத்து வரி என அனைத்தும் உயர்ந்துவிட்டதாக சாடிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் TN பொருளாதாரம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தார். TN-ல் தீயசக்தி ஆட்சி (அ) துரோக ஆட்சி (அ) தியாகத்தின் ஆட்சி வேண்டுமா என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
News April 8, 2026
ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழித்தால்…

ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழிப்பதைவிட அமர்ந்தவாறு கழிப்பது ஆரோக்கியமானது என டாக்டர்கள் கூறுகின்றனர். நின்றவாறு சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுவதும் காலியாகாமல், மீதமுள்ள சிறுநீரால் பிறப்புறுப்பில் பாக்டீரியா வளர வாய்ப்புள்ளது. அமர்ந்து சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுவதும் காலியாகி தொற்று ஏற்படும் ஆபத்து குறையுமாம். சிறுநீர் தொற்றுள்ளவர்கள் அமர்ந்து கழித்தால் நல்லது என்கின்றனர்.
News April 8, 2026
இவர்களுக்கெல்லாம் மாற்றுதான் தவெக: விஜய்

நான் கட்சி ஆரம்பிச்சிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போகல; ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய்ட்டுதான் கட்சியே ஆரம்பிச்சேன் என்று பரப்புரையில் பன்ச்சாக விஜய் பேசியுள்ளார். மேலும், காமராஜர், அண்ணாதுரை, MGR போன்று யாரும் வர மாட்டார்களா என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காகத்தான் தவெக வந்துள்ளது என்றும் அவர் நெல்லை பரப்புரையில் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?


