News February 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
Similar News
News February 10, 2026
EXCLUSIVE: அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பு

தமிழக பாஜக சக்தி கேந்திராவின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்.14-ம் தேதி அமித்ஷா சேலம் வரவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளதாம். சக்தி கேந்திரா என்பது தேர்தல், கட்சிப் பணிகளை வலுப்படுத்தும் பிரிவு ஆகும். வாக்குச்சாவடிகள், பிரசாரம் உள்ளிட்ட பணிகள் இதன் கீழ்தான் வருகின்றன. சுமார் 25,000 பேர் இந்த பிரிவில் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
News February 10, 2026
சிக்கன் சாப்பிடுவோருக்கு தமிழக அரசு எச்சரிக்கை

TN-ல் பறவைக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ள நிலையில், சிக்கன் சாப்பிடுவோர் நன்கு வேகவைத்து சாப்பிட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முட்டையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும் எனவும், ஆப் பாயில் சாப்பிட வேண்டாம் என்றும் கூறினார். மேலும், மர்மமான முறையில் உயிரிழந்த கோழிகளை சாப்பிட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
News February 10, 2026
எதிர்கட்சி யார் என்பதில்தான் விஜய் போட்டி: கடம்பூர் ராஜு

தவெக வெறும் கானல் நீர் தான் என கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். வெயில் காலம் தொடங்கிவிட்டதாக கூறிய அவர், இச்சமயத்தில் தென்படும் கானல் நீர் சில நிமிடங்களில் காணாமல் போய் விடும் எனவும் பேசியுள்ளார். மேலும், விஜய் ‘தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி’ என்று கூறுவது, அவர்களில் யார் எதிர்க்கட்சியாக வரப்போகின்றனர் என்பதற்கான போட்டியாக இருக்கலாம் எனவும் கூறியுள்ளார்.


