News February 2, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஊக்கமுடைமை ▶குறள் எண்: 599 ▶குறள்: பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்.
▶பொருள்: யானை பெரிய உடம்பையும் கூர்மையான கொம்பினையும் உடையது என்றாலும் புலி தாக்கினால் பயப்படும்.
Similar News
News February 19, 2026
மகா.,வில் முஸ்லிம்களுக்கான 5% இட ஒதுக்கீடு ரத்து

மகாராஷ்டிராவில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 5% இடஒதுக்கீட்டை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. கடந்த 2014-ல் காங்.,- NCP கூட்டணி இஸ்லாமியர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கும் அவசர சட்டத்தை நிறைவேற்றியது. ஆனால் மும்பை கோர்ட்டும் இந்த இடஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் இந்த அவசர சட்டம் காலாவதியாகிவிட்டதாக நேற்று மகா அரசு அறிவித்துள்ளது.
News February 19, 2026
3 கோலங்களில் காட்சியளிக்கும் முருகன்.. எங்குமில்லா அதிசயம்

காலையில் குழந்தையாக, மதியம் இளைஞனாக, மாலையில் முதுமையாக முருகன் காட்சி தரும் பாலசுப்ரமணியன் சுவாமி திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தொடர்ந்து 3 செவ்வாய்கிழமைகளில், நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் பதவி உயர்வும், புத்திர பாக்கியமும் கிடைக்குமாம். இக்கோயிலின் முருகனை பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். இப்பதிவை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News February 19, 2026
இந்த 3 இடங்களில் ஜெயித்தால் கோட்டை கன்ஃபார்ம்!

தமிழக தேர்தல் களத்தில் கட்சிகளின் வியூகம் எந்த அளவிற்கு பார்க்கப்படுகிறதோ, அதே அளவிற்கு சென்டிமெண்டும் கவனிக்கப்படும். அந்தவகையில் ராமநாதபுரம், நாமக்கல், வேடச்சந்தூர் ஆகிய 3 தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறுகிறதோ அந்த கட்சிதான் ஆட்சி அமைக்கும் என நம்பப்படுகிறது. அதன்படியே 1967 முதல் 2016 வரை இந்த 3 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சிகள் அல்லது அதன் கூட்டணியே ஆட்சி அமைத்துள்ளது என்பது தான் வரலாறு.


