News October 14, 2025
திண்டுக்கல்: Mobile-ல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே!
Similar News
News October 14, 2025
திண்டுக்கல்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் – சூப்பர் ஆஃபர்!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News October 14, 2025
விவசாயிகளுக்கு அடையாள அட்டை அவசியம்!

மத்திய அரசு வழங்கும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையைப் பெற தனித்துவ விவசாய அடையாள அட்டை அவசியம் என வேளாண்மை இணை இயக்குநர் அ.பாண்டியன் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் 75 ஆயிரம் விவசாயிகளில் 16,539 பேர் இதுவரை அட்டை பெறவில்லை. அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் தொடக்கத்தில் வழங்கப்படும் 21வது தவணைத் தொகை பெற, ஆதார், கைப்பேசி எண், சிட்டா நகலுடன் உடனே அட்டை பெற வேண்டும் என கூறினார்.
News October 14, 2025
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.8,000 (உதவித்தொகை ரூ.7,500 + மருத்துவப்படி ரூ.500) வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. ஆண்டுதோறும் 100 பேருக்கு வழங்கப்பட்ட இத்திட்டம், இப்போது 150 பேருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 17.11.2025க்குள் www.tamilvalarchithurai.tn.gov.in அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் நேரடியாக அளிக்கலாம்.