News March 20, 2024
திண்டுக்கல்: 76 இடங்களில் அனுமதி!

மக்களவை தோதலை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் 76 இடங்களில் தேர்தல் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், 254 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிா்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களை தவிா்த்து, பிற இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைக்குட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய் துறையினா் தெரிவித்தனா்.
Similar News
News April 21, 2025
திண்டுக்கல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 25-ந்தேதி காலை 10.30 மணிக்கு, விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து துறைகளின் தலைமை அலுவலர்கள் கலந்து கொண்டு மானிய திட்டங்கள், விவசாய கடன் தொடர்பாக விளக்கம் அளிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
News April 21, 2025
கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் காலபைரவர்

திண்டுக்கல்; தாடிக்கொம்பு பகுதியில் ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவருக்கென சன்னதி உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.