News April 19, 2024

திண்டுக்கல்: 102 வயதில் வாக்களித்த மூதாட்டி

image

இன்று தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம் பட்டியில் 102 வயது மூதாட்டி சின்னம்மாள், காலையிலேயே வரிசையில் நின்று தனது வாக்கை செலுத்தினார். முதியோர்கள் வாக்களிக்க அந்த மையத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.

Similar News

News February 7, 2026

திண்டுக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News February 7, 2026

திண்டுக்கல்: ஆதாரில் அப்டேட்.. இனி ரொம்ப ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஆதார் கார்டு திருத்தங்களுக்கு ஆதார் மையங்களுக்கு அலையுறீங்களா? இதனால உங்கள் நேரம் வீணாகுதா? இனி அலைச்சலே இல்லை. இதுக்காகவே ‘<>Aadhaar App<<>>’ என்ற புதிய சூப்பர் செயலி வந்துருக்கு. இந்த ஒரு App போதும் நீங்களே, உங்க வீட்ல இருந்தே ஆதாரில் உள்ள செல்போன் எண் மற்றும் முகவரி விவரங்களை ஈஸியா திருத்தலாம். இதுக்கு கட்டணமா ரூ.75 மட்டும் செலுத்தினால் போதும், அலைச்சல் மிச்சம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திண்டுக்கல்: தொழிலாளியை கொன்ற 55 வயது கள்ளக்காதலி!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், கள்ளக்காதலியான பாப்பாத்தியுடன் (55) பொருளூரில் வசித்து வந்தார். கடந்த 2023-ல் ராஜமாணிக்கம் படுகொலை செய்யப்பட்டார். கள்ளிமந்தையம் போலீசார் நடத்திய விசாரணையில், பாப்பாத்தியே அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பழனி கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!