News June 9, 2024

திண்டுக்கல்: வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்

image

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள இராமலிங்கம் பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில் ஆந்திரா, தெலங்கானா மற்றும் திண்டுக்கலை சேர்ந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியதால் இன்று பாதாள செம்பு முருகன் கோவிலுக்கு வருகை தந்து முடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

Similar News

News September 15, 2025

வத்தலக்குண்டில் 4.5 கிலோ கஞ்சா பறிமுதல்: வியாபாரி கைது

image

வத்தலக்குண்டு காந்திநகர் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், கஞ்சா வியாபாரியான லட்சுமிநாராயணன் (42) என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இவர் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை வாங்கி, பின் பேருந்து மூலம் வத்தலகுண்டுக்கு கொண்டுவந்து விற்பனை செய்வது தெரியவந்தது. அவரிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 14, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (செப்.14) இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News September 14, 2025

திண்டுக்கல்: தமிழ் தெரியுமா? ரூ.71,000 சம்பளம்!

image

திண்டுக்கல் மக்களே, தமிழில் எழுத படிக்க தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக எழுத்தர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர், இரவு காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.15,700 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!