News October 20, 2025
திண்டுக்கல்: வெளியூர் போன தகவல் சொல்லிட்டு போங்க..!

திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிர வாகன சோதனையும் நடத்தப்படுகிறது. தனியாக உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் அருகிலுள்ள 5 வீட்டுக்காரர்களின் நம்பர்களை வைத்திருக்க வேண்டும். அவசர நேரத்தில் வந்து உதவ தயாராக இருக்க வேண்டும். தீபாவளி விடுமுறையையொட்டி வீட்டை பூட்டி வெளியே செல்லும் முன் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
Similar News
News October 20, 2025
நத்தம்: மரத்துண்டு தலையில் விழுந்து துடிதுடித்து சாவு

செந்துறை அருகே உள்ள மாமரத்துபட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன்(33). மரம் வெட்டும் தொழிலாளி. கடந்த 17ந்தேதி இவர் பெரியூர்பட்டி பகுதியில் உள்ள தோட்டத்தில் மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட போது பெரிய மரத்துண்டு ஒன்றை வெட்டி எடுத்து, செல்லும் போது கால் தடுமாறி கீழே விழுந்ததில் மரத்துண்டு தலையில் விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். மேலும் நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 20, 2025
திண்டுக்கல்: ‘இந்த’ தவறுகளை செய்யாதீர்கள்!

திண்டுக்கல் மக்களே தீபாவளி என்பது மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கானது. இந்நாளில் கோபப்படுவது, சண்டையிடுவது தவிர்க்கவேண்டும். வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு தான் பூஜைகள் செய்ய வேண்டும். அழுக்கு அல்லது அலட்சியம் உண்டானால் நன்மை கிடைக்காது என்பது ஐதீகம்; மேலும் இரவில் தீபம், விளக்குகளை ஏற்றி வீட்டை ஒளிர வைக்க வேண்டும். அந்த நேரத்தில் வீட்டில் இருட்டாக வைத்தல் தவிர்க்கப்பட வேண்டும். இதனை ஷேர் பண்ணுங்க!
News October 20, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987 தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!