News August 25, 2025
திண்டுக்கல்: வாலிபர் துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: வத்தலகுண்டு பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ்(22). த.மு.மு.க நிர்வாகியான இவர் தனது நண்பருடன் பைக்கில் பழைய வத்தலகுண்டுவிற்குச் சென்றுள்ளார். திரும்பி வரும் போது தேனி நோக்கி வந்த அரசு பஸ் மோதியதில் தூக்கி வீசப்பட்டவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 25, 2025
திண்டுக்கல்லில் பிஸ்னஸ் தொடங்க மானியம்!

திண்டுக்கல் மக்களே ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.5 கோடி வரையிலான கடனுதவி NEEDS திட்டத்தின் மூலம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்க நினைப்போர் இத்திட்டத்தில் பயனடையலாம். இந்தக் கடனை திரும்பி செலுத்த 9 ஆண்டு கால அவகாசம், மானியத்துடன் 3% வட்டிக்கு வழங்கப்படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News August 25, 2025
திண்டுக்கல்: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (ஆகஸ்ட் 24) இரவு 11 மணி முதல் நாளை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25) மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளை முன்னெடுக்கிறது. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் வெளியிட்ட தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

திண்டுக்கல்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.(SHARE IT)