News September 22, 2025
திண்டுக்கல்: ரயிலில் கஞ்சா, குட்கா பறிமுதல்

திண்டுக்கல்: மதுரை சென்ற ஹைதராபாத், காச்சிக்குடா – மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, எஸ்.எஸ்.ஐ. மணிகண்டன் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருக்கைக்கு கீழே வைத்திருந்த பையில் இருந்த 4 கிலோ கஞ்சா, 6 கிலோ குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர்.
Similar News
News September 22, 2025
திண்டுக்கல்: மின் கம்பம் சேதமா..? உடனே புகார்!

தமிழக மின்வாரியத்தின் கீழ் பழுதடைந்த மின்கம்பங்களை உடனே புகார் அளிக்க 24 மணி நேரமும் இயங்கும் ஹெல்ப் லைன் எண் 1912-க்கு கால் செய்யலாம். மேலும், “TNEB Smart Consumer App” மூலம் ‘Complaint’ ஆப்ஷனில் புகார் பதிவு செய்யலாம். அதோடு www.tangedco.org தளத்தில் Consumer Complaints-ல் புகார் அளிக்கலாம். மேலும் சேதமடைந்த மின்கம்பங்கள் குறித்த புகாருக்கு 9443111912 என்ற எண்ணை வாட்ஸ் ஆப் மூலம் அழைக்கலாம்.
News September 22, 2025
திண்டுக்கல்: விவசாயி துடிதுடித்து பலி!

திண்டுக்கல்: நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பழனி(60) எனும் விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு நத்தம் துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றார். அப்போது துவரங்குறிச்சி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் வேகமாக ஓட்டி வந்த பைக் பழனி மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
News September 22, 2025
திண்டுக்கல்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

திண்டுக்கல் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!