News September 22, 2025
திண்டுக்கல் மாவட்ட போலீசார் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டக் காவல்துறை சார்பில், தினமும் விழிப்புணர்வு புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில், “வங்கியிலிருந்து பேசுவதாகக் குறைந்த வட்டியில் உடனடியாக கடன் தருவதாக உங்கள் செல்போனுக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம்” என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
Similar News
News September 22, 2025
திண்டுக்கல்: கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம்

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் வரை கடனுதவி திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மூலம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் இந்தக் கடனை 3 ஆண்டுகளில் திருப்பி செலுத்தலாம். உடனே மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை அணுகவும். (SHARE IT)
News September 22, 2025
திண்டுக்கல்: நகை பறித்த தவெக பிரமுகர்கள்!

திண்டுக்கல்: கொடைக்கானலில் சாக்லெட் கடைக்காரரை சரமாரியாக தாக்கி 7 சவரன் நகை பறித்த தவெக பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் சிசிடிவி பதிவுகளை வைத்து நடத்திய விசாரணையில் அந்தத் தாக்குதலில் ஈட்பட்டவர்க பழநி அருகே பெரிச்சிபாளையத்தைச் சேர்ந்த பழனிக்குமார், விக்னேஷ் ஆகியோர் என்பது தெரிந்ததும் அவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News September 22, 2025
திண்டுக்கல்லில் இளம்பெண் தற்கொலை!

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம், சின்ன கரட்டுப்பட்டி பகுதியில் உள்ள பேக்கரியில் கார்த்திகா எனும் பெண் கேசியராக பணியாற்றினார். இந்நிலையில், நேற்று(செப்.21) காலை கார்த்திகா வீட்டுக்குள் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கார்த்திகாவிற்கு திருமணமாகி மூன்று மாதங்களே ஆவது குறிப்பிடத்தக்கது.