News September 2, 2025
திண்டுக்கல் மாவட்டத்தின் விழிப்புணர்வு புகைப்படம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதேபோல் செப்டம்பர் 2 இன்று (குறைந்த விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக சமூக வலைதளத்தில் வரும் போலியான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News September 2, 2025
திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் புத்தக வெளியீடு!

திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்துகின்ற புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இன்று செப்-02 திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு 28 புத்தகங்களை இன்று வெளியிட்டு புத்தகங்களின் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
News September 2, 2025
திண்டுக்கல்; இன்றைய இரவு நேர ரோந்து காவலர்கள்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (செப்.02) இரவு 11 மணி முதல் புதன்கிழமை மாலை 6 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் மற்றும் வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 2, 2025
பசுக்களுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி; ஆட்சியர் அறிவுறுத்தல்

திண்டுக்கல் மாவட்டத்தில், செப்டம்பர் 3, 2025 முதல் நான்கு மாதங்களுக்கு மேல் அனைத்து பசுக்களுக்கும் தோல் கழலை நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த நோய், கால்நடைகளுக்கு எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். கால்நடை வளர்ப்போர் தங்கள் பசுக்களுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு, நோய் தாக்கத்திலிருந்து பாதுகாக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன், அறிவுறுத்தியுள்ளார்.