News August 14, 2024

திண்டுக்கல்: மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு விருது

image

திண்டுக்கல் பகுதியில் மாடித் தோட்டம் அமைத்த 100 பேருக்கு சுதந்திர தினவிழாவில், விருது வழங்கி கெளரவிக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 48 வாா்டுகளிலும் மொத்தம் 100 போ் தெரிவு செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம், மாடித் தோட்டம் அமைத்து மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Similar News

News September 16, 2025

திண்டுக்கல்: UPSC நிறுவனத்தில் சூப்பர் வேலை!

image

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் ‘UPSC’ நிறுவனத்தில் ‘Accounts Officer’ பணிக்கு 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.47,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.2ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 16, 2025

திண்டுக்கல்: தலைமறைவான கொலையாளி கைது!

image

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவேந்திரன் என்பவரை கத்யாதில் குத்தி கொலை செய்த வழக்கில் சேக்முகமது என்பவரை வத்தலகுண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேக்முகமது நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், திருப்பூரில் பதுங்கி இருந்த சேக்முகமதுவை போலீசார் கைது செய்தனர்.

News September 16, 2025

திண்டுக்கல்லில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திண்டுக்கல் மாநகராட்சி வார்டுகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை(செப்.17) திண்டுக்கல்லில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வளாகத்தில் காலை 10 மணிமுதல் மாலை 3 மணிவரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் அரசின் 14 துறைகளுக்கான 43 அரசு சேவைகளுக்கு விண்ணப்பம் செய்யலாம்.

error: Content is protected !!