News August 14, 2024
திண்டுக்கல்: மாடித்தோட்டம் அமைத்தவர்களுக்கு விருது

திண்டுக்கல் பகுதியில் மாடித் தோட்டம் அமைத்த 100 பேருக்கு சுதந்திர தினவிழாவில், விருது வழங்கி கெளரவிக்க மாநகராட்சி நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 48 வாா்டுகளிலும் மொத்தம் 100 போ் தெரிவு செய்யப்பட்டுள்ளனா். இதன் மூலம், மாடித் தோட்டம் அமைத்து மக்கும் குப்பைகளை வீடுகளிலேயே உரமாக பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
திண்டுக்கல்: POLICE தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு!

1) திண்டுக்கல் மாவட்டத்தில் நவ.9-ம் தேதி போலீஸ் தேர்வு நடைபெறவுள்ளது.
2) தேர்வு எழுத ஹால் டிக்கெட் (HALL TICKET) கட்டாயம்.
3) ஆதார், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை (ஏதேனும் ஒன்று) அவசியம்.
4) காலை 8 மணி முதல் 9.30 மணி வரை அறிக்கை நேரம். பின், 10 மணி முதல் பிற்பகல் 12.40 வரை தேர்வு நடைபெறும்.
5) வாட்ச், மோதிரம், பெல்ட் அணிய அனுமதி இல்லை.
இந்த தகவலை தேர்வு எழுதும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 7, 2025
திண்டுக்கல்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

திண்டுக்கல் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
நத்தம் அருகே விபத்து! தாய், மகன் பலி…

மதுரை கொட்டாம்பட்டியைச் சேர்ந்த அழகுமீனாள் (50) மற்றும் அவரது மகன் சரவணபாண்டி (24) நத்தம் அருகே பண்ணுவார்பட்டியில் உள்ள தாயின் வீட்டில் இருந்து திரும்பிய போது, பூதகுடி அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில், அழகுமீனாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த சரவணபாண்டி, மருத்துவமனையில் உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


