News October 17, 2025
திண்டுக்கல்: மகன் முன்னே தந்தை பரிதாப பலி!

திண்டுக்கல்: திருப்பூரைச் சேர்ந்த அபுபக்கர்(37), தனது மகன் ரபீக்(12) உடன் பாளையம் – அரவக்குறிச்சி சாலையில் பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது பைக் டயர் திட்டிரென பஞ்சரானதால் பைக் தடுமாறி விழுந்தது. இதில், அபுபக்கர் படுகாயமடைந்தார். அவரது மகன் ரபீக் காயமின்றி தப்பினார். அபுபக்கரை மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News October 18, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றுப்புறமான ஆத்தூர், நிலக்கோட்டை, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, நத்தம் ஆகிய பகுதிகளில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள தேவையான உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஏதேனும் புகார் இருந்தால் அதிகாரிகளுக்கு தொடர்பு கொள்ளலாம்.
News October 17, 2025
திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் (அக்டோபர் 17) இன்று, மழைக்கால சாலை பாதுகாப்பை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு புகைப்படம் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டது. “மழைக்காலத்தில் வாகனங்களை மெதுவாக, கவனமாக இயக்கி பாதுகாப்பாக பயணிப்போம்” என்ற வாசகத்துடன் வெளியான இந்த பதிவு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
News October 17, 2025
திண்டுக்கல்: நாளை கடைசி நாள்! மிஸ் பண்ணிடாதீங்க!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <