News August 14, 2024
திண்டுக்கல்: போதையில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர்

கேரளாவை சேர்ந்த நாசு, முகமது மாஸ், கிறிஸ்டி ஆகிய வாலிபர்கள் நேற்று கொடைக்கானலுக்கு வந்துள்ளனர். அப்போது, மது போதையில் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில், முகமது மாஸுக்கு கையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த போது, ஆத்திரமடைந்த நாசு என்பவர், மருத்துவமனை கண்ணாடியை உடைத்து கழுத்தை அறுத்துக் கொண்டார். இதுகுறித்து தற்போது கொடைக்கானல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 6, 2025
வத்தலகுண்டு: 11 வயது சிறுமி பரிதாப பலி

திண்டுக்கல்: வத்தலகுண்டு, சித்தரேவுவில் பீரோவில் புத்தகம் எடுக்க முயன்ற 11 வயது நந்தனாதேவி, தவறி கயிற்றில் விழுந்ததால் கழுத்தில் கயிறு சிக்கி உயிரிழந்தார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுமியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 6, 2025
திண்டுக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! APPLY NOW

தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு வருகிற ஆக்.7ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க நாளையே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News August 6, 2025
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 16 கிலோ குட்கா

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்கு வங்கம் – திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று(ஆக.6) காலை திண்டுக்கல் ரயில்வே போலீசார் சோதனையில், பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.