News March 26, 2024
திண்டுக்கல்: போக்சோ வழக்கில் 25 ஆண்டுகள் சிறை

நத்தம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2022ஆம் ஆண்டு ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, திருமணம் செய்து பாலியல் வன்புணர்வு செய்ததாக அர்ஜுனன் என்பவரை நத்தம் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கை விசாரித்த திண்டுக்கல் நீதிமன்றம் இன்று அர்ஜுனன் என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 3 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
Similar News
News February 9, 2026
திண்டுக்கல்: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

திண்டுக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 9, 2026
திண்டுக்கல் அருகே அரிவாளுடன் பயங்கர மோதல்!

திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் நேற்று இரு தரப்பினரிடையே நடுரோட்டில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காயமடைந்தவர்கள் 4 ஆம்புலன்ஸ்கள் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
News February 9, 2026
திண்டுக்கல்: தம்பதி வெட்டிக் கொலை.. கலெக்டர் உத்தரவு!

திண்டுக்கல், யாகப்பன்பட்டியை சேர்ந்த சேசுராஜ் மற்றும் அவரது மனைவி ஞானதீபிகா ஆகிய இருவர், கடந்த மாதம் 8-ஆம் தேதி முன்விரோதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள 9 பேரின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க, ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டார்.


