News August 10, 2024
திண்டுக்கல்: பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில், திண்டுக்கல் மாவட்டத்தில் அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஆக.10 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல்,பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு மனு அளித்து பயன்பெறலாம்.
Similar News
News September 16, 2025
திண்டுக்கல்: கை ரேகை வேலை செய்யலையா?

திண்டுக்கல் மக்களே, ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க இங்கு க்ளிக் செய்து Grievance Redressal, திண்டுக்கல் மாவட்டம், குடும்ப அட்டை எண் மற்றும் புகார் விவரங்களை குறிப்பிட்டு புகாரளித்தால் உங்கள் கைரேகை 7 – 10 நாட்களில் புதுப்பித்துவிடுவார்கள். புகாரில் தாமதமா: 1967 (அ) 1800-425-5901 அழைக்கலாம்.
News September 16, 2025
திண்டுக்கல்: UPSC நிறுவனத்தில் சூப்பர் வேலை!

திண்டுக்கல் மக்களே.., மத்திய அரசின் ‘UPSC’ நிறுவனத்தில் ‘Accounts Officer’ பணிக்கு 35 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.47,000 முதல் சம்பளம் வழங்கப்படும். வருகிற அக்.2ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க <
News September 16, 2025
திண்டுக்கல்: தலைமறைவான கொலையாளி கைது!

திண்டுக்கல்: வத்தலகுண்டு பகுதியில் கடந்த 2020ஆம் ஆண்டு நவேந்திரன் என்பவரை கத்யாதில் குத்தி கொலை செய்த வழக்கில் சேக்முகமது என்பவரை வத்தலகுண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சேக்முகமது நீதிமன்ற பிணை பெற்று வெளியே சென்று 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் பிடியானை பிறப்பித்தது. இந்நிலையில், திருப்பூரில் பதுங்கி இருந்த சேக்முகமதுவை போலீசார் கைது செய்தனர்.