News December 30, 2024

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை 

image

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதால், இதை சிறப்பிக்கும் விதமாக வருகிற 30 முதல் ஜனவரி 1ம் தேதி வரை 3 நாட்கள், தமிழக அரசின் சார்பில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திருவள்ளுவர் சிலை 25 ஆம் ஆண்டை நினைவு கூறும் வகையில், மாதிரி திருவள்ளுவர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 19, 2025

திண்டுக்கலில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. பழனி பெருநகராட்சியின் 10, 11, 12 வார்டுகளுக்காக, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம். திண்டுக்கல் மாநகராட்சி, அகரம் பேரூராட்சி, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.

News August 18, 2025

திண்டுக்கல்: ரூ.1,81,500 சம்பளத்தில் வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறவனத்தில் (TNPL) ரூ.1,81,500 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 20) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <>இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த தகவலை வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

News August 18, 2025

திண்டுக்கல்: பேக்கரியில் கொள்ளை

image

திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!