News March 24, 2025
திண்டுக்கல்: நகரத்தை அதிரச் செய்த வெடி சத்தம்

திண்டுக்கல் நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் பயங்கர வெடிச்சத்தம் இன்று(மார்ச் 24) கேட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் என்ன சத்தம் என்று வெளியில் பயத்துடன் வந்து பார்த்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே இது போன்ற பயங்கர வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது இது குறித்து எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.
Similar News
News November 4, 2025
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர் விபரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள், மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள காவல் உதவி எண்களை அழைத்து பயன்பெறுமாறு, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
திண்டுக்கலில் ரேஷன் குறைதீர் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் 08.11.2025 சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெறும். குடும்ப அட்டை பெயர் சேர்த்தல்/நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, புதிய/நகல் அட்டை பெறுதல் மற்றும் ரேஷன் கடை குறித்து புகார் அளிக்க பொதுமக்கள் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்தார்.
News November 4, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. கணக்கின் கடவுச்சொல்லை அடிக்கடி மாற்ற, அறியாத இணைப்புகள், மெசேஜ்கள் மற்றும் நபர்களை நம்பி தகவல் பகிர வேண்டாம். ஆன்லைன் மோசடி ஏற்பட்டால் உடனடியாக 1930 உதவி எண்ணுக்கு அழைக்கவும் அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


