News January 23, 2025
திண்டுக்கல் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்டதில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நாட்கள் குறித்த அறிவிப்பு இன்று வெளியானது. அதில் 7.02.2025- அன்று கொசவப்பட்டியிலும், 16.02.2025- தவசிமடையிலும்,19.02.2025-அன்று புகையிலைப்பட்டியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்படுகள், பாதுகாப்பு, போன்ற முக்கியமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியானது.
Similar News
News October 24, 2025
திண்டுக்கல் காவல்துறையின் விழிப்புணர்வு புகைப்படம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இன்று (அக். 23)ஆம் தேதி, இன்ஸ்டாகிராமில் “உங்கள் செல்போனுக்கு வரும் OTP & CCTV எண்களின் விவரங்களை வங்கிகள் மற்றும் UPI, கட்டண நிறுவனங்கள் கேட்க மாட்டார்கள்” என்ற விழிப்புணர்வு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றும் மோசடிகளை தவிர்க்க இதன் மூலம் எச்சரிக்கை வழங்கப்பட்டது.
News October 24, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல் துறை இன்று (அக்-23) இரவு 11 மணி முதல் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை, நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு காவல் துறையின் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 23, 2025
திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சியில் பெரியகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில், 24.10.2025 வெள்ளிக்கிழமை காலை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு அரசு நலத்திட்டங்களின் பயன் பெறுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.