News December 10, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, ஏடிஎம்களில் பணம் எடுக்கும் போது பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது . பணம் எடுத்த பின் உடனே விலகாமல் சுற்றுப்புறத்தை கவனிக்க வேண்டும் என்றும், உதவி செய்வதாக நடிக்கும் மர்ம நபர்களை நம்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏமாற்று சம்பவங்களைத் தடுக்க, தெரியாதவர்களிடம் கார்டு அல்லது பின் எண்ணை பகிர வேண்டாம் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News March 9, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் (மார்ச் 8) இரவு 10 மணி முதல் (மார்ச் 9) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர நிலை ஏற்பட்டால் தங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News March 8, 2026
திண்டுக்கல்: கேன் தண்ணீர் வாங்குவோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 8, 2026
திண்டுக்கல்: வங்கி ஊழியர்கள் குறித்து புகாரா! இத பண்ணுங்க

திண்டுக்கல் மக்களே வங்கிகளில் உங்களுக்கு ஊழியர்கள் முறையாக பதிலளிக்கவில்லையா? பணப்பரிவர்த்தனையின் போது கூடுதல் கட்டணம் கேட்கிறார்களா? கவலை வேண்டாம். இது போன்ற புகார்களை<


