News September 13, 2024
திண்டுக்கல் கலெக்டர் எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்டம் நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு மதுக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் அனைத்தும் 17.09.2024 (செவ்வாய்கிழமை)
மூடப்பட்டிருக்கும். மேலும், அன்றைய தினத்தில் விதிகளுக்குமாறாக மதுவிற்பனை ஏதும் செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் பூங்கொடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 12, 2025
திண்டுக்கல்: சுங்க வரித்துறையில் சூப்பர் வேலை!

திண்டுக்கல் மக்களே மத்திய அரசின் சுங்க வரித்துறையில் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th தகுதி போதுமானது, மாதம் ரூ.18,000முதல் ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News November 12, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

இணையத்தில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிலர் காதல் பேச்சு, நட்பு எனப் போலி சுயவிவரங்கள் மூலம் நம்பிக்கை பெற்று பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், ஏமாற்றத்துக்கு ஆளானால் உடனே 1930 எண்ணை அழைக்கவும் www.cybercrime.gov.in-ல் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 12, 2025
திண்டுக்கல்லில் ரூ.61 லட்சம் மோசடி!

திண்டுக்கல் வேடசந்தூர் அருகே விவசாய நிலம் விற்பதாக கூறி, கரூரைச் சேர்ந்த வக்கீல் தனசேகரனிடம் ரூ.61 லட்சம் மோசடி செய்ததாக சத்தியமூர்த்தி, ஹேமலதா உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, பெண் உள்பட இருவரை கைது செய்தனர். ரூ.75 லட்சத்தில் நிலம் விற்பதாக கூறி முன்பணம் பெற்றதாக கூறப்படுகிறது.


