News May 20, 2024

திண்டுக்கல்: கணவன், மனைவி தற்கொலை மனு

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தானமாக கொடுத்த இடத்தை மகன் விற்பனை செய்துள்ளார். இதனால், அந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தும் இதுவரை பட்டாவை ரத்து செய்யாததால் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியுரிமை ஆவணங்களை ஒப்படைத்து விட்டு, தற்கொலை செய்யப் போவதாக நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மகாமுனி மற்றும் அவரது மனைவி மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News

News March 9, 2026

திண்டுக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற<> இங்கே கிளிக்<<>> செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். SHARE பண்ணுங்க

News March 9, 2026

விஜய் வாக்குறுதி: திண்டுக்கல் சீனிவாசன் காட்டம்!

image

அதிமுக மகளிரணி சார்பில் நத்தம் ரோடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில், மகளிர் உரிமைத்தொகையை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து தான் வழங்கினார். தற்போது கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் தேர்தலுக்காக புதிய வாக்குறுதிகளை வெளியிடுகிறார் அதையெல்லாம் நீங்கள் நம்ப வேண்டாம்.தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றார்

News March 9, 2026

ஆயக்குடி அருகே சிறுவன் பரிதாப பலி

image

பழனி அருகே ஆயக்குடி பகுதியில் உள்ள சின்னாம்பாறையில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து சிறுவனின் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!