News October 21, 2025

திண்டுக்கல்: ஒரே நாளில் 150 டன் குப்பைகள் அகற்றம்!

image

தீபாவளி பண்டிகையை ஒட்டி திண்டுக்கல் மாநகராட்சியில் சுமார் ஆயிரக் கணக்கில் புதிய ஜவுளிக்கடைகள் மற்றும் பட்டாசுக் கடைகள் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் மக்கள் அனைவரும் இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே பட்டாசு வெடி பொருட்களை வாங்கி வெடிக்கத் தொடங்கினர். இதனால், மாநகராட்சியில் சுமார் 350 தூய்மை பணியாளர்கள் சாலைகளில் தேங்கி கிடந்த குப்பைகளை சுத்தம் செய்ததில் 150 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

Similar News

News October 21, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விபரம்!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் இன்று அக்டோபர்-21 செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்!

News October 21, 2025

திண்டுக்கல்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 21, 2025

திண்டுக்கல்லில் தூக்கிட்டு தற்கொலை!

image

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்தவர் சேவுகப்பெருமாள் (35). இவர் தனது மனைவி ராணி மற்றும் 2 குழந்தைகளுடன் ஒட்டன்சத்திரம் அருகே காந்திநகர் பகுதியில் குடியிருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு இருந்து வந்த நிலையில் சேவுகப்பெருமாள் இன்று(அக்.21) காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!