News August 17, 2024
திண்டுக்கல்: எஸ்டிபிஐ கட்சியினர் மனு

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு, எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் சி.கைசர் அலி தலைமையில் அந்தக் கட்சியினர் மனு அளிக்க வந்தனர். இந்து முன்னணி அமைப்பின் மாநில முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் உண்மைக்கு மாறான தகவல், சமூக பதட்டத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே, இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Similar News
News November 8, 2025
திண்டுக்கல் பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து இன்று முதல் 6 நாட்களுக்கு 1,000 கனஅடி விதம் தண்ணீர் திறக்கப்படும். வைகை அணையில் இருந்து 6 நாட்களுக்கு நீர் திறப்பதால் 35,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் நீர் திறப்பால் திண்டுக்கல், மதுரை மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
News November 8, 2025
திண்டுக்கல்லுக்கு 2 நாட்கள் எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வேலைக்கு செல்வோரும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதகாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மக்களே வெளியில் செல்லும்போது குடையுடன் போங்க. இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News November 8, 2025
பழனியில் போலி நீட் சான்றுடன் மாணவி, பெற்றோர் கைது!

பழனி: சொக்கநாதன் – விஜய முருகேஸ்வரி (47) தம்பதியரின் மகள் காருண்யா ஸ்ரீவர்ஷினி (19), நீட் தேர்வில் 456 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் தயாரித்து திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கான அனுமதி பெற்றார். இது போலியானது என கண்டறியப்பட்டு, குற்றப்பிரிவு போலீசார் அவர்களை கைது செய்தனர். விசாரணையில் சான்றிதழ் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கும்பலிடம் ரூ.25,000 கொடுத்து பெற்றது தெரியவந்தது.


