News September 23, 2025
திண்டுக்கல்: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

திண்டுக்கல்: சிறுமலை, 17 கொண்டை ஊசி வளைவு அருகே அடையாளம் தெரியாத சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இறப்புக்கு காரணம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News September 23, 2025
திண்டுக்கல்: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Data Entry Operator உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு ரூ.40,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பத்தை மின்னஞ்சல் முகவரிக்கு செப்.25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்திற்கு <
News September 23, 2025
திண்டுக்கல்: வேட்டையாடிய 14 பேர் கைது!

திண்டுக்கல்: கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வெயிலடிச்சான்பட்டியில் உள்ள குளத்தில் 4 காட்டுப்பன்றியை வேட்டையாடிய 14 பேரையும் வேட்டைக்கு பயன்படுத்திய 14 நாய்களையும் கன்னிவாடி வனத்துறையினர் பிடித்தனர். தொடர்ந்து வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட 14 நாய்களை ப்ளூ கிராஸ் இடம் ஒப்படைக்கப்பட்டன. வேட்டையில் ஈடுபட்ட 14 நபர்களுக்கும் ரூ.2,30,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
News September 23, 2025
திண்டுக்கல் துணை ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்

தமிழகத்தில் 30 துணை ஆட்சியர்கள் நிலையில் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது . அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரிந்த வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல் புதுக்கோட்டைக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருந்த கோட்டை குமார் மதுரைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.