News February 2, 2026
திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் (பிப்ரவரி 1) இரவு 10 மணி முதல் (பிப்ரவரி 2) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தாங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 10, 2026
நத்தம் அருகே விபத்து

வடமதுரை புத்தூர் பகுதியைச் சேர்ந்த காசி (23) என்பவர், தனது இருசக்கர வாகனத்தில் நத்தம் கல்வேலிபட்டி பிரிவு வழியாகச் சென்றபோது, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த மண் குவியல் மீது எதிர்பாராத விதமாக மோதினார். இவ்விபத்தில் நிலைதடுமாறி விழுந்து பலத்த காயமடைந்த அவரை, பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் GH-ல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 10, 2026
திண்டுக்கல் மாவட்டத்திற்கு IMD எச்சரிக்கை

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக அதிக பனி மூட்டம் நிலவி வந்தது. இதனால் அதிகாலையில் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இந்த பனிமூட்டம் விலகி, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என IMD கணித்துள்ளது.
News February 10, 2026
குரூப்–4 தேர்வில் வேடசந்தூர் மாணவி சாதனை!

வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரைச் சேர்ந்த செல்வி பாண்டீஸ்வரி (த/பெ. சுகுமார்) 25.04.2025 அன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி குரூப்–4 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சமூக நலத்துறையில் பணிநியமனம் கிடைத்த பின்னர், வருகிற 12 தேதி முதலமைச்சர் M. K.ஸ்டாலின் அவர்களிடமிருந்து பணியாணை பெற அழைப்பு வந்துள்ளது. வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் இன்று மாணவியை நேரில் பாராட்டி வாழ்த்தினார்.


