News July 7, 2025

திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று, (ஜூலை-07) இரவு 11.00 மணி முதல் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணி வரை நிலக்கோட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல், வேடசந்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். காவல் துறை அட்டவணையை வெளியிட்டு, அவசர உதவிக்கு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News July 8, 2025

திண்டுக்கல் கலெக்டர் தலைமையில் சிறப்பு முகாம்!

image

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னாள் பாதுகாப்பு படைவீரர்களுக்கான ஸ்பார்ஷ் (SPARSH) ஓய்வூதிய குறைதீர்ப்பு முகாம், மாவட்ட ஆட்சியர் செ.சரவணன் தலைமையில் இன்று (07.07.2025) நடைபெற்றது. கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News July 7, 2025

திண்டுக்கல்லில் பாவங்கள் போக்கி, வேலை தரும் கோவில்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல் நகரில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலாகும். இங்கு வேண்டினால் ராகு, கேது தோஷம் நீங்கும், செய்த தவறுக்கு மன்னிப்பு கிடைக்கும், இழந்த வேலை மீண்டும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும், குழந்தை பாக்கியம் கிடைக்க கிருத்திகை நட்சத்திர நாட்களில் சிவனிடம் வேண்டிக்கொள்கிறார்கள். SHARE பண்ணுங்க!

News July 7, 2025

திண்டுக்கல்லில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 29 பணியிடங்கள் நிரப்படவுள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதில் பணியாற்றுபவருக்கு 10 ஆண்டுகளுக்கு பின் கிராம நிர்வாக அதிகாரியாக பதவி உயர்வு வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4க்குள் விண்ணப்பிக்க வேண்டும். <<16974590>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!