News January 23, 2026
திண்டுக்கல்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
Similar News
News February 4, 2026
திண்டுக்கல்லில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

கன்னிவாடி பேரூராட்சி, பண்ணப்பட்டி, குரும்பப்பட்டி, காரமடை.சக்கரகவுண்டன் சாலை, கீழத்திப்பம்பட்டி, புதுப்பட்டி, சுரக்காய்ப்பட்டி.தெத்துப்பட்டி, மலையாண்டிபுரம், தருமத்துப்பட்டி,பழைய கன்னிவாடி, ராமலிங்கம்பட்டி, தோனிமலை, மேலத்திப்பம்பட்டி, வெள்ளமரத்துப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, முத்துராம்பட்டி, டி.கோம்பை, மல்லையாபுரம் பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை.
News February 4, 2026
திண்டுக்கல்லில் அறிவித்தார் கலெக்டர்!

திண்டுக்கல் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் பிப்ரவரி 3 முதல் 14 வரை கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி இருவார சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் சரவணன் விடுத்துள்ள அறிவிப்பில், பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி கால்நடை நிலையங்களை அணுகி, வளர்ப்பு கோழிகளுக்குத் தடுப்பூசி செலுத்தி பயனடையுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
News February 4, 2026
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப்.03) குழந்தைகளை பேருந்தில் அழைத்து செல்லும் போது தலை மற்றும் கைகளை வெளியில் நீட்டாமல் பாதுகாப்பாக அழைத்து செல்வோம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


