News March 26, 2024

திண்டுக்கல் ஆட்சியர் தகவல்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்க கல்வி பட்டய தேர்வு எழுத விரும்பும் தனி தேர்வர்கள் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் ஒட்டன்சத்திரம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (DIET) மூலம் இணைய வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

பழனியில் சோகம்.. பக்தர் பலி!

image

கரூர் மாவட்டம் அழகாபுரி சிபுதூரை சேர்ந்தவர் சுரேஷ். சென்ட்ரிங் தொழிலாளியான இவர், உறவினர்களுடன் பழனிக்கு பாதயாத்திரை வந்திருந்தார். இன்று காலை ஆயக்குடி அருகே ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றபோது, சென்னையிலிருந்து பாலக்காடு நோக்கி வந்த ரயில் மோதி அவர் உயிரிழந்தார். பழனி ரயில்வே உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

திண்டுக்கல் மக்களே உடனே SAVE பண்ணுங்க!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கான புகார் எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ரெட்டியார்சத்திரம் 0451- 2400195, குஜிலியம்பாறை 04551-293606, நிலக்கோட்டை 04543-294699, வடமதுரை 04551-2911823, ஆத்தூர் 0451-2911823, திண்டுக்கல் 0451-2999603, பழனி 04545-242180, கொடைக்கானல் 04542-243188 என ஆட்சியர் அலுவலகத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே, SHARE பண்ணுங்க!

News December 25, 2025

திண்டுக்கல்: மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்

image

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே சில்வார்பட்டி பகுதியில் பிரபு (38) என்பவர், குடும்பத் தகராறு காரணமாக மனைவி ஈஸ்வரியை (35) சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். இந்நிலையில் கொலையாளி பிரபுவை, சாணார்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!