News August 22, 2024

திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

image

ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ஆட்சியர் நிலக்கோட்டைக்கு சென்று இருப்பதாக கூறினார். ஆனாலும், அதனை ஏற்காத விவசாயிகள் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணாவில் ஈடுபட்டு, பின்னர் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தனர்.

Similar News

News December 10, 2025

கொடைக்கானலில் அதிரடி கைது!

image

கொடைக்கானல் பாம்பார் புரம் பகுதியில் போதைக் காளான் விற்பனை செய்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மணி என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் சுற்றுலா பயணிகளுக்கு போதைக் காளான் வழங்கி வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 30 கிராம் போதைக் காளான் பறிமுதல் செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News December 10, 2025

திண்டுக்கல்லில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 13.12.2025 அன்று சனிக்கிழமை ஒட்டன்சத்திரம் கிறித்துவப் பாலிடெக்னிக் கல்லூரியில் நடத்தப்படவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று வேலைநாடுநர்களைத் தேர்வு செய்ய உள்ளனர். எனவே இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல்.

News December 10, 2025

வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!