News April 27, 2024
திண்டுக்கல் அருகே விபத்து: இருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா சென்ற கார் இருசக்கர வாகனம் மீது மோதியது .இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராமகிருஷ்ணன், சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் உடல் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
Similar News
News August 22, 2025
திண்டுக்கல்: பஸ்சில் செல்வோர் கவனத்திற்கு!

திண்டுக்கல் மக்களே, அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை 1800 599 1500 இந்த கட்டணமில்லா நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என போக்குவரத்துத்துறை கூறியுள்ளது. இத SHARE பண்ணுங்க.
News August 22, 2025
திண்டுக்கல்: ரூ.45,000 சம்பளத்தில் SUPERVISOR வேலை!

திண்டுக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 22, 2025
அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம்

திண்டுக்கல்: மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்து பகுதியில் அமைந்துள்ள அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. மேட்டுப்பட்டி அடியனூத்து பஞ்சாயத்தில் அக்னி லிங்கேஸ்வரர் கோயிலில் இன்று(ஆக.22) அம்மாவாசை முன்னிட்டு சிறப்பு பூஜையும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது . இதில், அப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.