News December 21, 2025
திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல், வத்தலகுண்டு, சிவஞானபுரம் புதூரை சேர்ந்தவர் செல்லகண்ணு. இவர் தனது மனைவி, மகனுடன் பைக்கில் வத்தலகுண்டு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். மேலகோயில்பட்டி பிரிவில் வந்தபோது, மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் செல்லகண்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி, மகன் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News December 30, 2025
திண்டுக்கல்: கூட்டுறவு வங்கியில் வேலை! APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழக அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வி தகுதி: Any Degree, B.E/B.Tech
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க.
News December 30, 2025
BREAKING: திண்டுக்கல்லில் அதிரடி கைது

திண்டுக்கல்லில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.1.4 கோடி மதிப்பிலான தங்க நகைகளை திருடியதாக திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதில், அக்கடை ஊழியர்கள் ஆன செல்வராஜ், காசாளர்கள் கார்த்திகேயன், பாண்டியன், சரவணகுமார் கார்த்திக் மற்றும் விற்பனையாளர் விநாயகன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 3 பேரை கைது செய்தனர்.
News December 30, 2025
திண்டுக்கல் : மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (டிச.29) உங்களது செல்போனிற்கு வரும் அனைத்து வகையான OTP எண்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். OTP எண்ணை மற்றவர்களிடம் தெரிவிப்பது திருடனிடம் சாவியை கொடுப்பதற்கு சமம். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


