News March 31, 2024
திண்டுக்கல் அருகே ரூ.139000 பறிமுதல்

திண்டுக்கல்லை அடுத்த எரியோடு அருகே குண்டாம்பட்டி பெட்ரோல் பங்க் அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குஜிலியம்பாறை அருகே உள்ள அழகப்பஉடையனூர் பகுதியை சேர்ந்த சண்முகவேல் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1,39,000 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றி வேடசந்தூர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Similar News
News August 15, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், (சாலையை கடக்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்ப்போம்) என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படம் திண்டுக்கல் மாவட்ட காவல் துறை சார்பாக இன்று தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
News August 14, 2025
திண்டுக்கல்: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

திண்டுக்கல் மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News August 14, 2025
திண்டுக்கல்: உங்கள் ஊராட்சி வரவு செலவு கணக்கை பாருங்க!

திண்டுக்கல் மக்களே தமிழகம் முழுவதும் நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடைபெறுகின்றது. கிராம சபைக் கூட்டத்தில் உங்கள் ஊராட்சியின் வரவு செலவு கணக்கு வாசிக்கப்படும், எனவே ஊராட்சி வரவு செலவு கணக்கில் பிழை (அ) மாற்றம் இருப்பதை கண்டறிய <