News August 11, 2024

திண்டுக்கல்லை சேர்ந்த குடும்பம் தற்கொலை: என்ன காரணம்?

image

திண்டுக்கல்லை சேர்ந்த சந்திரசேகரன் மற்றும் அவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் நேற்று முன்தினம் புதுச்சேரியில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து, உறவினர்களிடம் புதுச்சேரி போலீசார் விசாரித்தனர். நகை உருக்கும் தொழில் செய்துவந்த சந்திரசேகர், திருட்டு நகைகள் வாங்கிய புகாரில் சிக்கியதால் போலீசார் விசாரணை நடத்தியதாகவும்,அதனால் மனமுடைந்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Similar News

News August 6, 2025

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 16 கிலோ குட்கா

image

திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த மேற்கு வங்கம் – திருநெல்வேலி வரை செல்லும் புருலிய அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று(ஆக.6) காலை திண்டுக்கல் ரயில்வே போலீசார் சோதனையில், பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று இருந்த பையை சோதனை செய்தனர். அதில், அரசால் தடை செய்யப்பட்ட 16 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் இருந்தது. அதனை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.

News August 6, 2025

திண்டுக்கல்: SBI வங்கி வேலை! APPLY NOW

image

திண்டுக்கல் மக்களே.., SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates(Customer Support and Sales) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. ஆரம்ப கட்ட சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். மூன்று கட்ட தேர்வுகள் நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் பண்ணுங்க. <<>>உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 6, 2025

திண்டுக்கல்: அனைத்து சேவைகளுக்கும் ஒரே APP!

image

திண்டுக்கல் மக்களே.., நீங்கள் விவசாயம் செய்து வருபவராக இருந்தாலோ, இனி செய்ய முனைவோராக இருந்தாலோ இனி கவலை வேண்டாம். உங்களுக்கான மானியங்கள், சேவைகள், உபகரணங்கள், துறை சார்ந்த சந்தேகங்கள், விவசாயக் கூலிகளுக்கான சேவைகள் என அனைத்தையும் எளிய முறையில் வழங்க ‘<>உழவர்<<>>’ எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உடனே இதில் ரெஜிஸ்டர் செய்யுங்கள். மேலும் உதவிகளுக்கு மாவட்ட இசேவை மையத்தை அணுகலாம். உடனே SHARE

error: Content is protected !!