News September 15, 2024
திண்டுக்கல்லுக்கு இன்று HAPPY BIRTHDAY

திண்டுக்கல் மாவட்டத்துக்கு இன்று 40வது பிறந்த நாள். மா, பலா, வாழை என முக்கனிகள் விளைந்து, முத்திரை பதிக்கும் திண்டுக்கல் மதுரை மாவட்டத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டை கிளவியாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை பிரித்து 1985ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பழனி முருகன் கோவிலை தன்னகத்தே கொண்ட மாவட்டம் திண்டுக்கல் என்பது கூடுதல் சிறப்பு.
Similar News
News August 11, 2025
கீரனுார் அருகே செங்கல் சூளையில் மரணம் போலீசார் அறிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் கீரனூர் காவல் நிலையச் சரகம் தும்பலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள தனியார் செங்கல் சேம்பரில் சந்தேகத்திற்கு இடமாக ஒரு ஆண் இறந்து கிடப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றது. மேற்படி தகவலின் அடிப்படையில் கீரனூர் காவல் ஆய்வாளர் சம்பவயிடம் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த மரணமானது மேற்படி இருவருக்கும் இடையே காதல் தொடர்பான பிரச்சனையில் ஏற்பட்ட மரணம் என்று விசாரணையில் தெரியவருகிறது.
News August 11, 2025
கீரனூர் அருகே கொலை சிறுமி உட்பட மூன்று பேர் கைது!

பழனியை அடுத்த கீரனூர் அருகே தும்மலபட்டியில் அருகே தேவி சேம்பர் செங்க சூலையில் தும்மலபட்டியை சேர்ந்த மகுடீஸ்வரன் மகன் சரவணகுமார்(24) என்ற வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வட மாநிலத்தை சேர்ந்த சிறுமி, 19 வயது இளம்பெண் மற்றும் சிறுமியின் தந்தை ஆகிய 3 பேரை கீரனூர் ஆய்வாளர் தென்னரசன் தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News August 11, 2025
திண்டுக்கல்: கேட்ட வரம் தரும் 700 ஆண்டு கால கோயில் !

திண்டுக்கல்: ஆத்தூர் காமராஜர் அணை அருகே கரடு முரடான மலைப் பாதையில் அமைந்துள்ள சடையாண்டி மலைக்கோயில் 700 ஆண்டுகாலம் பழமையானது. இந்தக் கோயிலுக்கு திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். குகைக் கோயிலான இந்தக் கோயிலில் எந்த வேண்டுதலை வைத்தாலும் நிறைவேறும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. திண்டுக்கல் மக்களே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!