News August 21, 2024

திண்டுக்கல்லில் வெளுத்து வாங்கிய மழை 

image

திண்டுக்கலில் பலத்த மழை காரணமாக நேற்று ஆா்.எஸ்.சாலை, நேருஜிநகா் வட்டச்சாலை, பழனி சாலை பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் தேங்கி போக்குவரத்து பாதித்தது. பழைய கரூா் சாலை ரயில்வே சுரங்கப்பாதையில், மழைநீா் தேங்கியதால் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட நேரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. காலையிலிருந்து வெயில் வாட்டிய நிலையில், மாலையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Similar News

News April 7, 2026

நத்தம் அருகே சோகம்; மகன் கண் முன்னே தாய் பலி!

image

மேலுார்- காடம்பட்டியை சேர்ந்தவர் மாலா(47). இவர் நேற்று தனது மகன் விஜய்குமாருடன்(21) பைக்கில் பின்னால் அமர்ந்து நத்தம்- சிறுகுடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செந்துறை சாலையில் பைக் சென்று கொண்டிருந்த போது எதிரே ஆவிச்சிபட்டியை சேர்ந்த சொக்கர்(36) என்பவர் ஓட்டி வந்த பைக் அவர்கள் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நத்தம் போலீசார் விசாரணை.

News April 7, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

News April 7, 2026

திண்டுக்கல்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு அந்தந்த உட்கோட்ட அதிகாரிகளை தொலைபேசி வாயிலாகவோ அல்லது 100 என்ற எண்ணையோ அழைத்து தகவல் தெரிவிக்கலாம். மேலும், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் பொதுமக்களின் வசதிக்காக வழங்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!