News December 27, 2024
திண்டுக்கல்லில் பெண் பரபரப்பு புகார்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று கும்பகோணத்தை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தன்னை காதலித்து திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் இருந்தும், பல லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டும் ஏமாற்றியதாக புகார் அளித்தார். அந்த புகாரில், திண்டுக்கல் மாவட்ட நல்லாம்பட்டியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறி ஏமாற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Similar News
News August 19, 2025
திண்டுக்கலில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (ஆகஸ்ட் 19) நடைபெறுகிறது. பழனி பெருநகராட்சியின் 10, 11, 12 வார்டுகளுக்காக, ராஜாஜி சாலையில் உள்ள நகராட்சி சமுதாய கூடத்தில் முகாம் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் இதில் பங்கேற்று பயனடையலாம். திண்டுக்கல் மாநகராட்சி, அகரம் பேரூராட்சி, வத்தலக்குண்டு, ஆத்தூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
News August 18, 2025
திண்டுக்கல்: ரூ.1,81,500 சம்பளத்தில் வேலை! APPLY NOW

திண்டுக்கல் மக்களே, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறவனத்தில் (TNPL) ரூ.1,81,500 வரை சம்பளம் பெறக்கூடிய காலியாகவுள்ள 9 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் (ஆகஸ்ட் 20) தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News August 18, 2025
திண்டுக்கல்: பேக்கரியில் கொள்ளை

திண்டுக்கல்: வடமதுரை அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேக்கரி கடையின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.62 ஆயிரம் பணம், கடையில் இருந்த சிசிடிவியின் ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.