News January 1, 2026

திண்டுக்கல்லில் புல்லட் திருடன் கைது

image

திண்டுக்கல் டெலிபோன் காலனியில் வெங்கடேஷ் என்பவரது புல்லட்டை வீட்டிற்கு வெளியே இரவு நேரத்தில் நிறுத்தி இருந்த நிலையில் காணாமல் போனது. இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில், திண்டுக்கல் நாகல்நகர், மென்டோசா காலனியைச் சேர்ந்த கிஷோர் என்பவர் என்று தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து புல்லட்டை பறிமுதல் செய்தனர்.

Similar News

News January 28, 2026

திண்டுக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) திண்டுக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 28, 2026

திண்டுக்கல்: ரூ.1000 வரலையா? உடனே புகார் பண்ணுங்க!

image

திண்டுக்கல் மக்களே, ரூ.1000 வரலையா? மேல்முறையீடு செய்தும் பலன் இல்லையா? அதை தீர்க்க வழி இருக்கு. விடுபட்டவர்களுக்கு ரூ.1000 கிடைக்க அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறைத்தீர்வு பக்கத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக் <<>>செய்து உங்க பெயர், ரேஷன் எண், குடும்ப தலைவர் பெயர் பதிவிட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆவணங்களை பதிவேற்றம் செய்து பதிவு பண்ணுங்க. விரைவில் தீர்வு கிடைக்கும். (SHARE பண்ணுங்க)

News January 28, 2026

கொடைக்கானல்: பள்ளி மாணவி தற்கொலை

image

கொடைக்கானல் அருகேயுள்ள தனியாா்பள்ளியில் கேரளத்தைச் சோ்ந்த மாணவி கீா்த்தனா 9-ம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், அவா் மன உளைச்சலில் இருந்ததாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, திங்கள்கிழமை காலை கீா்த்தனா தங்கியிருந்த அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பாா்த்த விடுதி காவலா் உள்ளிட்டோா் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!