News September 8, 2025

திண்டுக்கல்லில் பிறந்த குழந்தையை குதறிய நாய்கள்!

image

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் அருகே இன்று(செப்.8) பிறந்து ஒரு நாள் ஆன குழந்தையின் சிசு குப்பையில் வீசி சென்ற கொடூர சம்பவம் நடந்தேறியுள்ளது. அந்த குழந்தையை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த திண்டுக்கல் வடக்கு காவல் துறையினர் குழந்தையை வீசி சென்றவர்கள் யார்? என சிசிடிவி காட்சிகளின் மூலம் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Similar News

News September 8, 2025

திண்டுக்கல்: இலவச Tally பயிற்சி! APPLY NOW

image

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Tally Certified Accountant with GST பயிற்சி வழங்கப்படவுள்ளது. 20 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், Tally தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதில் பயிற்சி பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இந்த <>லிங்கை க்ளிக்<<>> செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 8, 2025

திண்டுக்கல்: குப்பையில் நாய் கடித்துக் குதறிய சிசு மீட்பு!

image

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனை நுழைவாயில் அருகே (செப்டம்பர் 8) இன்று பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் உடலை குப்பையில் வீசிச் சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது. வீசிச்சென்ற சிசுவின் உடலை அப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்கள் கடித்து குதறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 8, 2025

திண்டுக்கல்: சிறுவனை கடித்துக் குதறிய தெருநாய்!

image

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சிக்குட்பட்ட தெக்க தோட்டம் பகுதியில் இன்று விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை தெரு நாய் கடித்தது. இதில், சிறுவனின் முகத்தில் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக, பெற்றோர்கள் சிறுவனை பழனி தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த பகுதியில் தெரு நாய் தொல்லை அதிகம் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!