News September 15, 2025
திண்டுக்கல்லில் பிரபல நகைக் கொள்ளையன் கைது!

திண்டுக்கல்: வேடசந்தூர், சுள்ளெறும்பு, நால் ரோட்டில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் வீட்டில் கடந்த 4ஆம் தேதி பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை திருட்டு போனது தெரிய வந்தது. பாலமுருகன் இது குறித்து வேடசந்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளின் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் கதிரியன்குளம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் இன்று(ஸெப்.15) கைது செய்யப்பட்டார்.
Similar News
News September 15, 2025
திண்டுக்கல்லில் அண்ணாதுரை பிறந்த நாள் விழா

திண்டுக்கல்: முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள அண்ணா அவர்கள் உருவச் சிலைக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியசாமி தலைமையில் பேரணி சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதில், அப்பகுதி திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
News September 15, 2025
திண்டுக்கல்: BE பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை!

திண்டுக்கல் பட்டதாரிகளே.., மத்திய அரசு நிறுவனமான ‘இஞ்ஞினியர்ஸ் இந்தியா’-வில் காலியாக உள்ள 48 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணிக்கு தேர்வெழுத அவசியம் இல்லை. மாதம் ரூ.72,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு நடைபெறும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <
News September 15, 2025
திண்டுக்கல்: ஆவினில் பணி புரிய அரிய வாய்ப்பு!

▶️தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.
▶️20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும்.
▶️இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க <